நிவ்வெளிகம பகுதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அருகில் இளைஞரொருவரின் சடலம் இன்று (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இன்று காலை நிவ்வெளிகம பகுதியில் உள்ள இரண்டு சிறுமிகள் முகம் கழுவதற்காக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் வந்த போதே ஒரு ஜோடி பாதணிகளையும் ஸ்மார்ட் போன் ஒன்றையும் கண்டுள்ளனர்.
இதனையடுத்து, கொழுப்பில் உள்ள தனது தந்தையாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சிறுமியின் தந்தை தொலைபேசி ஊடாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் தேடுதல்களின் போது குறித்த பகுதியில் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் கிடந்த ஸ்மார்ட் போன் மற்றும் பாதணியும் நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் எனும் இளைஞனினுடையது என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment