Press "Enter" to skip to content

சிறுமிகளிடம் நிர்வாணப் படம் கேட்ட மாணவருக்கு 13 வருட சிறை அவுஸ்ரேலியாவில்

அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு அச்சுறுத்திய குற்றத்திற்காக 24 வயதான இலங்கையைச் சேர்ந்த இளைஞருக்கு விக்டோரியா நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குறித்த மாணவன் தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு பல சிறுமிகளை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நிர்வாணப் புகைப்படங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறும் இல்லையெனில், பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இவர் மீது சிறுவர் துஷ்பிரயோக வழக்குடன் சம்பந்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

விசாரணையின் பின்னர் அவருக்கு 13 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனைக் காலம் முடிந்ததும் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் உயர் கல்வியை தொடர்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *