Press "Enter" to skip to content

கடந்த ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் – பாரிய பின்னடைவை சந்தித்த வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ள வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறுவனத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் சிறந்த பங்களிப்பை வழங்கக் கூடிய கடலட்டை வளர்ப்பில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் புதிய கடலட்டைப் பண்ணைகள் அதிகரித்து வருகின்றமையினால், பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கு சாத்தியமான வழிவகைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்பினருடன் இன்று கலந்துரையாடினார்

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் சிறந்த பங்களிப்பை வழங்கக் கூடிய கடலட்டை வளர்ப்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பலனாக மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் கடலட்டை குஞ்சுகளுக்கான தேவை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *