பதுளை – ஹாலி எல, உடுவரை பகுதியில் நடுவீதியில் மாணவியொருவர், கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பாடசாலைக்கு சென்று வீடு, திரும்பிய 18 வயதான மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். பழைய பகையொன்றே இச்சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய 32 வயதான சந்தேகநபர், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் தலைமறைவான , சந்தேகநபர் இன்று அதிகாலை ஹாலிஎல பொலிஸில் ஆஜரானார் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒருவருடமாக குறித்த மாணவியை சந்தேகநபர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் அதனை அம்மாணவி நிராகரித்து வந்துள்ளார்.அதேவேளை அத்துடன் மாணவியின் பெற்றோரும் காதலை எதிர்த்தமையால், மாணவியின் பெற்றோர், சந்தேகநபரால் இதற்கு முன்னர் கத்திகுத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Be First to Comment