நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவில் தாமும் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், இருநாட்டு மீனவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள கடற்றொழில் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன்மூலம், இருநாட்டு மீனவர்களிடத்திலும் புரிந்துணர்வினை ஏற்படுத்த முடியும் என தாம் நம்புவதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
Be First to Comment