Press "Enter" to skip to content

கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும், மகனும் பலி!!

ஆஸ்திரேலியா, சிட்னி மேற்கில் கால்வாய் ஒன்றுக்குள் கார் கவிழ்ந்ததில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை கால்வாயில் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார் வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதற்குள் உடமைகள் கண்டுபிடிக்கப்பட்டபோதும், காரில் பயணித்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

காரின் உரிமையாளரான 67 வயதான ஹேமலதா சச்சிதானந்தம் மற்றும் ஒட்டிசம் பாதிப்புடைய அவரது 34 வயதான மகன் பிரமுத் சச்சிதானந்தம் ஆகியோரே காணாமல் போயிருந்தனர்.

கால்வாய் நீரில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்ட நிலையில், கால்வாயில் சற்றுத் தொலைவில் இரு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக அங்கு மழை பெய்துவரும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்து கார் கால்வாய்க்குள் கவிழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

யாழ்ப்பாண பின்னணி கொண்ட ஹேமலதா சச்சிதானந்தம் வானொலி அறிவிப்பாளராக தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *