Press "Enter" to skip to content

உணவுப் பொதி ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிப்பு!

உணவுப் பொதியின் விலையானது இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

மேலும், கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தன் காரணமாக, இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *