உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மறுபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நேற்று முன்தினம் துருக்கியில் இரு நாடுகளின் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியானது.
இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் கூறும்போது, “உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது சாதகமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்
உக்ரைனுடனான சமரச பேச்சு தினமும் தொடர்ந்து வருவதாகவும் புதின் தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த அடிப்படையிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அவர் கூறவில்லை.
அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைன் ராணுவம் முக்கியமான திருப்புமுனை மற்றும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
Be First to Comment