Press "Enter" to skip to content

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் பலி!

சம்மாந்துறை – நயினாகாடு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளது.
குறித்த சிறுவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காணியொன்றில், விறகு சேகரிப்பதற்கு இன்று மதியம் சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *