Press "Enter" to skip to content

உக்ரைனில் கடும் மோதல் – 12 முக்கிய தளபதிகளை இழந்தது ரஷ்யா

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா தனது முக்கிய படைத்தளபதிகள் 12 பேரை இழந்துள்ளதாக தெரியவருகிறது.

ரஷ்ய இராணுவ உளவுத்துறையான GRUவின் உயர் அதிகாரி மற்றும் 3 முக்கிய ஜெனரல்கள் உள்பட 12 தளபதிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனின் மரியுபோல் அருகே நடந்த சண்டையில் 31 வயதான கப்டன் அலெக்ஸி குளுஷ்சாக் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இராணுவ நடவடிக்கையின் இரகசியம் காரணமாக அதிகாரிகள் மரணம் குறித்த விபரத்தை வெளியிட முடியாது என ரஷ்யத் தரப்பு தெவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *