தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் முட்டாள் தனமான கருத்தினை தெரிவித்திருக்கிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்
மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து ஐநாவில் அரசாங்கத்தை காப்பாற்றி தன் மூலமே தற்பொழுது அரசாங்கமானது காணாமலாக்கப்பட்டோருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடி மறைக்க முற்படுகின்றது இதற்கு முண்டு கொடுத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் இதற்கு உரிய பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்
ஆனால் செல்வம் அடைக்கலநாதன் நேற்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் காணாமலாக்கப்பட்டோருக்கு அரசின் ஒரு லட்சம் ரூபா நட்ட ஈட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் ஒரு முட்டாள் தனமாக தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்
Be First to Comment