Press "Enter" to skip to content

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு திட்டத்தின் பயனாளிகள் 36 பேருக்கு பிரதமரால் வீட்டு உரிமங்கள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நாவற்குழி வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகள் 36 பேருக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வீட்டு உரிமைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாவற்குழி சமித்தி சுமண விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிக்குமார் தங்குமிடக் கட்டிடத்தை திறந்துவைத்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்த தங்குமிடக் கட்டிடம் கட்டப்பட்டது.

பிக்குமார் தங்குமிடக் கட்டிடத்தை திறந்துவைத்த மாண்புமிகு பிரதமர், அப்பகுதியில் உள்ள 50 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 50 போசாக்கு உணவு பொதிகளையும் வழங்கி வைத்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *