Press "Enter" to skip to content

மூளாயில் கோர விபத்து..! ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்..

மூளாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நியு கமால் மாபிள் விற்பனை நிலையத்தில் கணக்காளராக பணியாற்றும்

காரைநகர் கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞரே காயமடைந்தார்.

மூளாய் – மாவடி வீதியில், காளி கோயிலுக்கு சமீபமாக இவ்விபத்து இடம்பெற்றது. மேற்படி இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் உயிரிழந்தவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் அதிக இரத்தம் வெளியேறியிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உயிரிழந்தவரின் சடலமும்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *