எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் சந்தைக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நாட்டை வந்தடைந்த 3, 500 மெட்ரிக் டன் எரிவாயுவை கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் இன்று (22) பிற்பகல் ஆரம்பமானது.
குறித்த தொகையின் மூலம், எதிர்வரும் மூன்று நாட்களுக்கான சமையல் எரிவாயு கேள்வியினை பூர்த்தி செய்ய முடியும்.
எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மேலும் 7, 000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment