Press "Enter" to skip to content

ஐக்கிய மக்கள் சக்தி பத்து பேர் பாயத்தயார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 10 பேர், விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்கள் ரணிலுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பிய போதே அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *