Press "Enter" to skip to content

காதல் விவகாரம் காதலியின் வீட்டுக்கு தீவைத்து கொழுத்திய காதலன்..! 3 பேர் உடல்கருகி பலி..

கண்டி – கட்டுகஸ்தோட்ட சாப்புகடவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தீயில் எரிந்த நிலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று காலை 6.40 மணிக்கு இடம்பெற்றிருக்கும் நிலையில்,

தந்தை, மகள் மற்றும் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், தாய் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும் குறித்த வீட்டுக்கு வந்திருந்த மகளின் காதலன் என தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த 60 வயதான தாய்

கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகட்டு கூரையால் வேயப்பட்ட ஒரு சிறிய வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். தீ ஏற்பட்டதை அவதானித்த பிரதேசவாசிகள்

குறித்த வீட்டின் கதவொன்றைத் திறந்து அங்கிருந்த ராணி அம்மா என அழைக்கப்படும் பெண்ணை (தாய்) மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தீக்காயங்களுடன் உயிரிழந்த யுவதியின் காதலன் வீட்டுக்கு வந்து

தீ வைத்ததாக தெரிவிக்கப்படும் தகவலின் அடிப்படையில்  கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம்

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கும் மேற்படி இளைஞருக்கும் இடையிலான காதல் தொடர்பே இந்த தீபரவலக்கான காரணம் என்றும், இன்று அதிகாலை (24) குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இளைஞன்,

வீட்டுக்குள் எவருக்கும் செல்ல முடியாத வகையில் கதவுகளை பூட்டி, தீயை வைத்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த இளைஞன் ஏதோ ஒருவகையான திரவத்தை வீட்டுக்குள் வீசியுள்ளதாக

வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் தாய் வாக்குமூலமளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இச்சம்பவத்தில் குறித்த இளைஞன்,

யுவதி மற்றும் யுவதியின் தந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *