Press "Enter" to skip to content

நாளை முதல் மின்வெட்டு நேரம் குறைகிறது

இலங்கைக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளைமுதல் (02) மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ (M.C. Ferdinando) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை முதல் நான்கு மணி நேரத்துக்கும் குறைவான மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். மின்சார சபைக்கு தொடர்ந்து உலை எண்ணெய் மற்றும் டீசல் விநியோகம் கிடைத்தால், மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய மின்சார சபையினால் தற்போது முடியாது, தற்போது நிலக்கரி மின் உற்பத்தி மூலம் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது.

நீர் மின் நிலையங்கள் மூலம் 300 மெகாவோட் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும், மாலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை 800 மெகாவாட் தேவைப்படுகின்றது நீர் மின் மூலம் அதை நிறைவேற்ற முடியாது.

அனல் மின் நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புக்கு 1,100 மெகாவோட் வழங்குகின்ற போதும் எரிபொருள் பற்றாக்குறையால் அதுவும் பாதிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *