Press "Enter" to skip to content

கோட்டபாய- மஹிந்த அவசர சந்திப்பு- இன்றிரவு முக்கிய முடிவு

சர்வ கட்சி அரசாங்கத்திற்காக தனது பதவியை தியாகம் செய்ய தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறிய போதிலும் இறுதி தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், ஜனாதிபதியும் பிரதமரும் இன்று இரவு கலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக குறித்த அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் ராஜபக்ஷர்கள் அனைவரும் அமைச்சுப் பதவிகளை துறப்பதற்கு தயாராக இருப்பதாக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ தொடர வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை, அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *