Press "Enter" to skip to content

ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை இடம்பெற வேண்டும் – அமெரிக்க ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

யுக்ரைனக் தலைநகருக்கு அருகிலுள்ள புச்சாவில் 410க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதற்கு சர்வதேச ரீதியாக பல எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ரஷ்ய தலைவர் கொடூரமானவர் எனவும் அவர் ஒரு போர் குற்றவாளி எனவும் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆதாரம் இன்றி உக்ரைனால் போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டையும் ரஷ்யா மறுத்துள்ளது.

இந்தநிலையில் போர்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்கு உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *