Press "Enter" to skip to content

நெருக்கடிக்கு தீர்வு தேடிய பாராளுமன்றத்தின் இறுதி முடிவு

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டின் நிலைமைக்கு தீர்வு காண்பது தொடர்பான விவாதத்தின் போது சாதகமான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் அரிதாகவே முன்வைக்கப்பட்டமை மிகவும் வருத்தமளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (07) விவாதம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனவே, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான வேலைத்திட்டத்தை முன்வைக்கும் வகையில் செயற்படுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்வதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நேற்றும் (06) இன்றும் இந்த விவாதம் நடைபெற்றது.

இதன்படி, நாட்டின் தற்போதைய நிலமை குறித்த இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *