உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பிலான உண்மை இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தனது பொறுப்புக்களை ஆற்றாத முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மறை உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பிலான உண்மை இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாத குழு இருந்தது உண்மை. அவர்கள் இந்தத் தாக்குதலில் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.
Be First to Comment