Press "Enter" to skip to content

கணவன், மனைவிக்கு இடையிலான முறுகலில் மனைவி படுகொலை

பொலன்னறுவை மீகஸ்வௌ, மஹஅம்பஸ்வெகக பிரதேசத்தில், குடும்ப தகராறு காரணமாக பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று மீகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்.

மஹஅம்பகஸ்வௌ பிரதேசத்தை சேர்ந்த 21 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில ஏற்பட்;ட முறுகலையடுத்து, கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை படுகொலை செய்துள்ளார் என்று தெரிவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயது நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *