யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் நுாதன திருட்டு சம்பவங்களில் கடந்த 3 வருடங்களாக ஈடுபட்டுவந்த 25 வயதான பெண் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குப்பிளான் பகுதியில் திருட்டு முயற்சியின்போது இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கொட்டகச்சி தலமையிலான காங்கேசன்துறை விசேட புலனாய்வு பிரிவின்
நிதர்சன் தலமையிலான குழுவே இக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதான பெண்ணிடமிருந்து வெளிநாட்டு பணங்களும் மற்றும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் வீதியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் அருகில் இருந்த cctv கமராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும்
தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
Be First to Comment