Press "Enter" to skip to content

நம்பிக்கையில்லா பிரேரணை: ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற பிரதான எதிர்க்கட்சி திட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவை கோருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார, நிதி நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்கள் குறித்து தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்தபோது பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை குறித்து பொருளாதார நிபுணர்கள் நாடாளுமன்றக் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுவிற்கு விளக்கமளித்தனர் என்றும் அவர் கூறினார்.

மேலும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளுடன் எதிர்க்கட்சிகள் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *