Press "Enter" to skip to content

யாழ்ப்பாணம் – சத்திர சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி!

யாழ்ப்பாணம் – சத்திர சந்தி பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

உந்துருளி மீது பாரவூர்தி மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த உந்துருளியில் சிறுவனும், தாயாரும் பயணித்திருந்த நிலையில், பின்னால் வந்துகொண்டிருந்த பாரவூர்தி மோதியதில், சிறுவன் வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்குண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் காவல்துறையினர், பாரவூர்தியின் சாரதியை கைது செய்ததுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *