Press "Enter" to skip to content

சைக்கிளில் சென்றவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம், கைதடியில் சம்பவம்..

யாழ்.கைதடி பாலத்திற்கு அருகில் சைக்கிளில் சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்றுமுன்தினம் 10ம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதடியை சேர்ந்த சு.சுதாகர் (வயது52) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

கைதடி பாலத்தடியிலிருந்து கைதடிப் பிள்ளையார் கோவிலை நோக்கி துவிச்சக்கர சென்று கொண்டிருந்த அவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

நேற்று திங்கட்கிழமை(11) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *