Press "Enter" to skip to content

காணாமல்போன இருவரை தேடும் பணி இடைநிறுத்தம்!

நுவரெலியா கொத்மலை பொலிஸ் பகுதியில், வவுனியாவில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவர் இதுவரை மீட்கப்படவில்லை என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று, இரண்டாவது நாளாகவும், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போது, ஒரு யுவதியின் சடலமே கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், இளைஞர் ஒருவரினதும், யுவதி ஒருவரினதும் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
பெய்து வரும் மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, இன்று மாலை, தேடுதல் பணி இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை, நாளையதினமும், யுவதியையும், இளைஞரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என, கொத்மலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *