Press "Enter" to skip to content

பிரேரணைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற குழு நாளை பேச்சுவார்த்தை

அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

குறித்த பிரேரணைகளை, சபாநாயகரிடம் கையளிக்கும் காலம் தொடர்பில், இந்தக் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதனை ஒரு வாரத்தால் பிற்போடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

சமகால பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன், நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு அது தாக்கம் செலுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் வழங்கிய அறிவுறுத்தலைக் கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *