Press "Enter" to skip to content

எரிபொருள் விலை அதிகரிப்பு: தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம்!

கடந்த 17 ஆம் திகதி லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்தது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, இன்று காலை முதல் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் என்பன அடிப்படையில் குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபாவரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று தெரிவித்திருந்தமையும் குறிபிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *