ரம்புக்கனையில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு அமெரிக்கா, கனடா தூதுவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது ருவிட்டர் பதிவில்,
“ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் பயங்கரமான செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். எந்தவொரு வன்முறையையும் நான் கண்டிக்கிறேன். அத்துடன், அங்கு அமைதி திரும்ப அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் தனது அறிக்கையில், “ரம்புக்கனையில் இறந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். அதிகபட்ச கட்டுப்பாடு அவசரமாக தேவை. வன்முறையை தூண்டுபவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரம்புக்கனை சூட்டு சம்பவத்துக்கு அமெரிக்கா, கனடா கண்டனம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment