இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பங்களாதேஷுக்கு செலுத்த வேண்டிய 450 மில்லியன் டொலர் கொடுப்பனவை ஒத்திவைப்பதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று இதனைத் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
Be First to Comment