Press "Enter" to skip to content

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 200 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவி!

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக்க டொலர்) அவசர மனிதாபிமான உதவி வழங்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏற்பாட்டைச் செய்வதற்கு சீன அதிகாரிகளுக்கு இலங்கையின் தேவை குறிப்பிடப்பட வேண்டும். மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் அடிப்படையில் இத்தகைய உதவிகள் வழங்கப்படும் என பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவரான கலாநிதி பாலித கொஹோன தெரிவித்தார்.

தவிர, 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிகள் – 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக் கொள்பவரின் கடனுதவி – இலங்கையினால் கோரப்படுவது தற்போது நடைமுறையில் உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க சீனாவிடம் நிதி உதவி கோரியுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *