Press "Enter" to skip to content

தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் உறுதியான அரசியல் தலைமை ஏற்படவில்லை – என். சிறிகாந்தா

தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் உறுதியான அரசியல் தலைமை ஒன்று ஏற்படவில்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பு தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

உறுதியான அரசியல் தலைமைத்துவம் ஒன்று ஏற்படும் வரையில் அனைவரும் விட்டுக்கொடுப்புகளுடன் செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *