Press "Enter" to skip to content

ஐக்கிய மக்கள் சக்தி – சுயாதீனமாக இயங்கும் எம்.பிக்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையே, இன்றிரவும் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற சந்திப்புகளில், இணக்கம் காணப்படாத விடயங்கள் குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்புக்கு ஆரம்பித்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று மாலை கடுகன்னாவை நகரை வந்தடைந்த இந்தப் பேரணி, இன்று காலை அங்கிருந்து ஆரம்பமாகி மாலை வேளையில், கலிகமுவை நகரை வந்தடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் விதமாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் பேரணி, மே தினத்தன்று, கொழும்பை வந்தடைய உள்ளது.

இதேநேரம். கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 19ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *