Press "Enter" to skip to content

குறைந்த விலையில் எரிபொருள் தருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது : எல்லே குணவன்ச தேரர்

நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் களுக்கு உண்மையான ஆர்வமும் உறுதியும் இருந்தால் மூன்று நாட்களில் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால தேசிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும், நிறக் கட்சிகளை ஒதுக்கி வைத்து மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள் ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் போதுமான எரிபொருளை ரஷ்யாவால் வழங்க முடியும் என ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *