இன்றைய வேலைநிறுத்தப் போராட்டம் 95% வெற்றியடைந்துள்ளதாக தொழிற்சங்கங்களின் அரச , மாகாண மற்றும் அரசாங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஒன்பது மாகாணங்களில் இருந்தும் அரச, அரை அரச மற்றும் தனியார் துறை கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளரான அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.
இன்றைய அடையாள வேலைநிறுத்தம் அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்குள் தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே இவ்வாறான அலுவலகங்களுக்குள் எந்த வேலையும் முடிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment