Press "Enter" to skip to content

இனி நகரங்களுக்கு மட்டுமே எரிவாயு விநியோகமாம்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் வரை நகரங்களுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவால் தினசரி எரிவாயு விநியோகம் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் சிலிண்டர்களில் இருந்து 30 ஆயிரம் சிலிண்டர்களாகக் குறைக்கப்படும் என்றும், 27 சதவீத எரிவாயு நுகர்வோர் மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துவர் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் மாதாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 30 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதால், அவ்வாறான செலவுகளை மேற்கொள்ள முடியாது எனவும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *