பிரதமர் பதவி விலகவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கவில்லை – விடுக்கப்போவதுமில்லை – ஜனாதிபதி
By admin on April 29, 2022
பிரதமர் பதவி விலகவேண்டும் என தான் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொதுஜனபெரமுன நாடாளுமன்றஉறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து ஜனாதிபதி தான் பிரதமர் பதவி விலகவேண்டும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் நோக்கமும் தனக்கில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஜனாhதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் பிரதமர் தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன அனைத்து கட்சி அரசாங்கத்திற்காக பிரதமர் பதவி விலகவேண்டும் என அவர் எதிர்பார்க்கின்றாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தனக்கு அவ்வாறான நோக்கம் இல்லை தான் வேண்டுகோள் விடுக்கவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment