ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைகளை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி உறுப்பினர்களுக்கிடையே இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த பிரேரணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கலந்துரையாடலின் போது பிரதி சபாநாயகர் பதவி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment