Press "Enter" to skip to content

வீதியால் நடந்து சென்றபோது மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்! யாழ்.பருத்தித்துறையில்…

பருத்தித்துறை – கிராமக்கோடு பகுதியில் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மயங்கி விழுந்த முதியர் நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் முதியவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *