பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாக்கவே பிரதமர் பதவியை ஏற்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கலாம் எதிர்வரும் மாதங்களில் நாட்டின் நிலைமை மேலும் மோசமடையலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்காக கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரைக்கு நேற்றிரவு வருகை தந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்தும் அவர் பேசினார்.
“மக்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள். இந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர வேண்டும். அடுத்த சில மாதங்கள் இன்னும் கடினமாக இருக்கும். ஆனால் இதிலிருந்து நாம் வெளியேற வேண்டும். அதைத்தான் நான் செய்ய முடிவெடுத்தேன்.” IMF உடன் கலந்துரையாடி நாட்டுக்கான பொருளாதார உதவியை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“ரூபாய்க்கு மதிப்பு இருக்க வேண்டும், இளைஞர்களுக்கு எதிர்காலம் இருக்க வேண்டும்.”
நாளை அமைச்சரவையை நியமிக்கும் நம்பிக்கை இல்லை.
“போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கோட்டா கோகமவை தொட மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை குறித்து கேள்விகள் கேட்கப்படும்போது பெரும்பான்மையைக் காட்டுவோம். எனக்கு இரு தரப்பிலும் பெரும்பான்மை உள்ளது அவசியமான நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.தற்போது உங்களுக்கு பெரும்பான்மை உள்ளதா எனஊடகவியலாளர்கள் வினவியபோது ஆமாம் எனக்கு ஆதரவு உள்ளது என்றார் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஊடகங்களும் வாக்களிக்குமாறு தானே கூறினீர்கள் எந்த ஊடகம் ஆவது கோத்தபாயவுக்கு வாக்களிக்க வேண்டாமென கூறுகிறீர்களா இல்லையே கோட்டா கோக மவில் ரணில் கோகமஎன கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பிய போது எனது வீட்டுக்கு முன்னால் வந்து என்னை விட்டு போகச் சொன்னால் நான் எங்கே போவது என்று தான் எனக்கு குழப்பமாக உள்ளது என்றார்.
Be First to Comment