Press "Enter" to skip to content

ஊரடங்கு உத்தரவு

நாட்டில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க ஜனாதிபதியால் இந்த ஊரங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் அன்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *