Press "Enter" to skip to content

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த? – ராஜித வெளியிட்ட முக்கிய தகவல்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இதுவரை கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு ரணில் அழைக்கவில்லை என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

கட்சிகளுடன் சம்பிரதாயமான வெளிப்படையான கலந்துரையாடலுக்குப் பின்னர் முறையான உடன்படிக்கைக்கு அமைவாக அமைச்சரவை அமைக்கப்பட்டால்தான் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்வர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போதும் அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான உரையாடல்களை நடத்த முடியும் என்றும் சரியான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன, இந்த நடவடிக்கையும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமே என தெரிவித்துள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது’ என்றும் அவர் கூறியுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *