Press "Enter" to skip to content

மே 18 நினைவேந்தல் பிரசுரம் மெல்பர்ன் போராட்டத்தில் கிழிப்பு!

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஆர்ப்பாட்டத்தில் விநியோகிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் துண்டுபிரசுரம் பெரும்பான்மை இனத்தவர் ஒருவரால் கிழித்தெறியப்பட்டது.

இந்தச் சம்பவம் மூவின மக்கள் வாழும் – இனவெறியற்ற இலங்கைக்காக போராடுகிறோம் என்ற விடயத்தை அவமதிப்பதாகவும் – அவ்வாறு போராடுவோரின் முகத்திரைகளை கிழிப்பதாகவும் அமைந்துள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழ் செயல்பாட்டாளர்கள் விநியோகித்த துண்டுபிரசுரமே பெரும்பான்மை இனத்தவரால் கிழித்தெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *