புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இதுவரையில் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் தரப்பின் முன் வரிசையில் ஆசனம் வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் தரப்பின் ஆசனத்தில் அமரவுள்ளனர்.
Be First to Comment