சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் உயர்த்துவதற்கு லிட்ரோ நிறுவனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய எரிவாயு 5 ஆயிரம் ரூபாயையும் விட அதிகரிக்கலாம் என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரூபாய்க்கு எதிரான டொலரின் விலை அதிகரிப்பு, உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு என்பவற்றால் தற்போதைய விலையில் எரிவாயுவை விற்பனை செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எது எப்படி இருப்பினும், தற்போது 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் நிர்ணய விலை 4,860 ரூபாய் என்ற போதிலும் விற்பனை முகவர்கள் 5,000 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதேவேளை, நாளை வியாழக்கிழமையும் எரிவாயு விநியோகம் நடைபெறாது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது
Be First to Comment