Press "Enter" to skip to content

பேருந்து நிலையத்தில் சரமாரி துப்பாக்கி சூடு..! ஒருவர் பலி, மேலும் இருவர் படுகாயம்..

கொழும்பு – புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திரசிகிச்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *