Press "Enter" to skip to content

சுங்க திணைக்கத்தின் யாழ்.காங்கேசன்துறை பிரிவினர் அதிரடி..! 4 கோடி ரூபாய் தங்கத்துடன், 3 பேர் கைது..

இலங்கை சுங்க திணைக்களத்தின் யாழ்.காங்கேசன்துறை பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தலைமன்னார் கடற்பரப்பில் சந்தேக நபர்கள் மூவருடன் தங்கம் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் புதுக்குடியிருப்பு மற்றும் பேசாலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் காங்கேசன்துறை பிரிவினர்

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *