பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 3.30க்கு பிரதமர் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச 21 ஆம் அரசியலமைப்புத் திருத்த வரைவு, அது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த சட்டமூல வரைவானது, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னர் 21 ஆம் திருத்த வரைவு குறித்து இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில், இன்றைய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
Be First to Comment