Press "Enter" to skip to content

ஒக்டோபர் முதல் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் -பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எச்சரிக்கை

2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 195,000 மெற்றிக் தொன் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரித்துள்ளார்.


நாடும் மக்களும் 50% நெல் விளைச்சலையும் 65% முதல் 70% மக்காச்சோள விளைச்சலையும் இழந்த ஓர் இருண்ட காலத்தின் விளைவுகளை நாடு அனுபவித்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை, நெல் பிரதான பயிராக இருக்கும் இந்தப் பருவத்தில் நெல் விளைச்சல் 50%க்கும் மேல் குறைவடையும்.

அதற்கிணங்க, இந்த நேரத்தில் செய்ய வேண்டியது அடுத்த மகா பருவத்தை இப்போதிருந்தே மிகவும் வெற்றிகரமானதாக மாற்றி, எதிர்வரும் மகா பருவத்துக்குத் தேவையான அளவு விதை நெல்லை உற்பத்தி செய்வதாகும் என்றார்.

தற்போது நெல் பயிரிடப்படாத வயல் நிலங்களை முடிந்தவரை பச்சைப்பயறு போன்ற சத்தான பயிர் நிலங்களாக மாற்ற வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *